Sunday 13 October 2013

விஜயநகர சாம்ராஜியதின் முடிவுரை எழுதப்பட்ட ஸ்ரீரங்கம் தீவு!!! (1616 AD)


தோகூர் கிராமம் தற்போதைய தோற்றம் 






விஜயநகர சாம்ராஜியதின் முடிவுரை எழுதப்பட்ட ஸ்ரீரங்கம் தீவு!!! (1616 AD)

இதற்கு முந்தைய பதிவுகளில் சைவ வைணவ போர் (1375 AD) மற்றும் கோவில் அதிகாரியும் அன்று சோழ தேசத்து மகாமண்டல அதிகாரிக்கும் இடையில் நடந்த போட்டியில் , போரிட்டு கொல்லப்பட்ட கோனேரி ராஜ பற்றியும் அறிந்தோம் ( 1495 AD) ..

இன்று மற்றும் ஓர் நூற்றாண்டு கடந்து ஒரு மிகப்பெரிய வரலாற்று முக்கியத்தவம் வாய்ந்த போர் ஸ்ரீரங்கம் தீவில் நடந்த விசயத்தை பார்க்கப்போகிறோம் ..

இந்த போர் பற்றி அறியும் முன் விஜயநகர சாம்ராஜ்யத்தை பற்றி நாம் சிறிது அறியவேண்டும் ...

தென் இந்தியாவை, முக்கியமாக தமிழகத்தை  முகமதியர்கள் ஆளுகைக்குள் வராமல் மற்றும் நமது கலாச்சார சின்னங்களை அழிக்கப்படாமல் 1371 AD  முதல் காத்து வந்தமைக்கு இவர்கள் ஆளுமையே காரணம் ..தமிழகம் பெரும்பாலும் இவர்களாலும் நாயக்க அரசர்களாலும் காக்கபட்டதற்கு விஜயநகர் பேரரசே அஸ்திவாரம். (ஆனால் 1600 AD பிறகு இவர்கள் நகரங்களை பீஜப்பூர் சுல்தான்கள் கொள்ளை கொண்டு அழித்தவற்றை இன்றும் நாம் காண முடிகிறது ஹம்பியில் )

    நமது தமிழகத்தை  நாயக்ககர்கள் 1734 AD வரை ஆண்டு வந்தனர்.  டெக்கான் பகுதியில் சுல்தான்கள் விஜய நகர தலைமை மாகாணங்களை அழித்து ஒழித்தனர் .(விஜயநகர அரசர்கள் அப்போது தமிழகத்தில் வேலூர் கோட்டையை உண்டாக்கி இங்கே தங்கி விட்டனர் .

     தமிழகத்தை ஆண்ட  நவாப் ஆட்சி காலத்தில் பெரும் பாலும் அவர்கள் இந்துக்களை கணக்கு வழக்குக்கு நம்பி இருந்தது தெரிகிறது ...எனவே நமது பகுதியில் பெரும் இடிப்புகள்  ஏற்படவில்லை ஆனால் நிறைய கோவில் நகைகள் கொள்ளை போயின 


   இந்த விஜயநகர அரசனாக 1600 Ad வேங்கடபதி தேவராயன்  ..தனது சகோதரன் மகன் ஸ்ரீரங்க சிக்க ராய என்பவனை அரசன் ஆக்கினான் .. வேங்கடபதி மனைவியின் சகோதரன் ஜக்கராயன் ,இதில் கோபம் கொண்டு ஸ்ரீரங்க சிக்க ராயனை சிறை பிடித்து ஆட்சியை கை பற்றினினான்!!

அரசனுக்கு வேண்டிய அதிகாரிகள் இதனால் சிறையில் இருக்குந்த ஸ்ரீரங்க சிக்க ராயன் இளைய மகன் ஸ்ரீராமன் என்கிற சிறுவனை   வண்ணான் கூடையில் வைத்து சிறையில் இருந்து வெளியில் கொண்டு வந்தனர் ..
விசயம் அறிந்த ஜக்கராயன் அரசன் சிக்க தேவராயன் அவன் மனைவி பதினேழு வயது மூத்த மகன் அனைவரையும் தன் வாளால் வெட்டிக் கொன்றான்!!

அப்போது தமிழகத்தை இரு வேறு நாயக்க குடும்பங்கள் ஆண்டு வந்தன ..தஞ்சை மற்றும் மதுரை நாயக்ககர்கள்.. (வழக்கம் போல் விரோதிகள் !!)

தஞ்சை நாயக்கனாக அப்போது இருந்தவன் மிக மிக புகழ் வாய்ந்த இரகுநாத நாயக்கன். இவனது கீர்த்திகளை பற்றி பல தெலுங்கு பாடல்கள் தஞ்சை சரஸ்வதி மஹாலில் தற்போது கிடைக்கிறது  .. சிறையில் இருந்து கடத்திவரப்பட்ட இளவரசன் ஸ்ரீராமனை  விஜய நகர தளபதி யச்சமநாயக்கர் ..தஞ்சை அரசனான இரகுநாத நாயக்கனிடம் ஒப்படைத்து கும்பகோணத்தில் விஜயநகர பேரரசனாக மூடி சூட்ட வைத்தனர் .அதை போற்றும் விதமாகவே  கும்பகோணத்தில் தஞ்சை அரசன் இரகுநாதநாயக்கன்  இராம பட்டாபிஷேக கோலத்தில் அமைந்த இராமசுவாமி கோவிலை கும்பகோணத்தில் அமைத்தான் ...

ஜக்கராயன், மதுரை நாயக்கர் துணையுடன் ஸ்ரீரங்கத்தில் தங்கி தஞ்சையை தாக்க திட்டமிட்டு இருந்தான் .. இந்த செய்தி இலங்கையில் போரில் வெற்றி கொண்டு அங்கு முகாம் இட்டு இருந்த தஞ்சை அரசன் இரகுநாத நாயக்கனுக்கு தகவல் பெறப்பட்டு ஸ்ரீரங்கம் நோக்கி வந்தான் ...இதனை தடுக்க கல்லணை அணையை விஜயநகர படைகள் இடித்து விட்டு தஞ்சாவூர் பெரும் பகுதி வெள்ளத்தில் ஆழித்தின






தோகூர் எனப்படும் ஊர் இப்போது கல்லணையின் ஒரு பகுதியாக உள்ள ஒரு சிறு ஊர் .. மேல் காணும் படத்தில் இரண்டு செல் போன் டவர் உள்ள ஊரே அது ..!! தற்போது திருச்சி செல்லும் சாலை மேல்  ஒரு ஐயனார் கோவில் ஒரு பழமையான ஒரு பெருமாள் கோவில் உள்ளது .. தற்சமயம் பெருவாரியான மக்கள் கிருஷ்துவர்களாக இருக்கிறார்கள் .



இரண்டு படைகளும் தற்போதைய கல்லணை பகுதியில் பெரும் சண்டையில் இடுபட்டன.. (
portugies missioniery Barradas , என்போர் இந்த சண்டையை பற்றி குறிப்பிடும் போது இது இந்தியாவில் நடந்த மிக அதிக மக்கள் ஈடு பட்ட போர் (சுமார் பத்து லக்ஷம் பேர்) இது போல் இதற்க்கு முன்  நடந்ததில்லை என்று எழுதியுள்ளார் ...

இந்த போரில் ஜக்கராயன்  படைகள் தோல்வியுற்றன... இவ்வாறாக விஜயநகர சாம்ராஜ்யம் ஸ்ரீரங்கத்தில் கீழ் புற எல்லையில் உள்ள ஒரு சிறிய கிராமத்தின் கரையில் காவேரி மற்றும் கொள்ளிட ஆற்றில் முடிவுற்றது ...


இந்த போருக்கு பின் நாயக்க மன்னர்கள் தனி உரிமை பெற்று தமிழகத்தை ஆண்டனர் (முதல் கப்பம் கட்டாத நாயக்கன் நமது திருமலை நாயக்கன் !!) ..இந்த போர் முடிவில் தான் மதுரை நாயக்கர்கள் திருச்சியை தலைநகராக கொண்டனர் (1520 AD)

.பிரான்சிஸ் டே அப்போது சிறு குறுநில மன்னாக இருந்த விஜயநகர் அரசன் ஸ்ரீராமனுக்கு (தோகூர் போருக்கு காரணமான சிறுவன்)  பிறகு பட்டத்துக்கு வந்த பேட வேங்கட ராயாவிடம்  எழுதி வாங்கிய ஒரு கடல் கரையோர நிலம் தான் ஜெயலலிதா தற்போது அமர்ந்து ஆட்சி புரியும் புனித ஜார்ஜ் கோட்டை (Fort St. George) என்பதை அனைவரும் அறிவோம்  !!

இது நடந்த நாள்.. நள ஆண்டு ஆஷாட மாதம் வளர்பிறை பஞ்சமி திதியுடன் சூரியன் பூசத்திலுள்ள நாள் (மகம் ) 1616 AD june 9th Sunday..





7 comments: